Posted on Leave a comment

கூந்தல் தைலம்

தலை முடி நன்கு வளர மூலிகை கூந்தல் தைலம். ஆண் பெண் இருபாலரும் உபயோகிக்கலாம் .

தேவையான பொருட்கள்:

1.தேங்காய் எண்ணெய் -1 லிட்டர்
2.அவுரிச்சாறு – 100 மில்லி
3.கரிசாலைச்சாறு – 100 மில்லி
4.கற்றாழைச்சாறு – 100 மில்லி
5.நெல்லிச்சாறு – 100 மில்லி
6.கொட்டகரந்தைச்சாறு – 100 மில்லி
7.கீழாநெல்லிச்சாறு -100 மில்லி
8.பால் – 100 மில்லி
9.செவ்விளநீர் -2 எண்ணம்
10.வெப்பாலை இலை – 50 கிராம்
11.மருதாணி இலை – 50 கிராம்
12.நன்னாரி வேர் – கைப்பிடி
13.வெட்டிவேர் – கைப்பிடி
14.வெந்தயம் – 10 கிராம்
15.கருஞ்சீரகம் – 10 கிராம்
16.நாகனம் – 10 கிராம்
17.சுருள்பட்டை – 3 கிராம்
18.கிச்சிலி கிழங்கு -50 கிராம்

செய்முறை:
எண் 1 முதல் 9 வரை அனைத்தையும் ஊற்றி நன்கு கலந்துவிடவும்.

பிறகு எண் 10 முதல் 16 வரை அனைத்தையும் இடித்து கல்கமாக அரைத்து எண்ணெய்யுடன் கலந்து அடுப்பை சிறு தீயில் எரியவிட்டு காய்ச்சவும்.

நீர்தன்மை முற்றிலும் அடங்கியபின் எண்ணெய் பதத்தில் வந்தவுடன் எண் 17ல் உள்ள சுருள்பட்டை தூளை தூவி இறக்கிவிடவும்.

இளஞ்சூட்டில் வடிகட்டிய பின்னர் கிச்சிலி கிழங்கு தூளை பருத்தி துணியில் முடிந்து எண்ணெய்யில் இட்டு ஒருமாதம் சூரியப்புடம் வைத்து பயன் படுத்தலாம்.

பலன்:
முடி நன்கு வளரும்.
முடியுதிர்தல் நிற்கும்.
பொடுகு போகும்.
இளநரை குணமாகும்.
பித்த வெடிப்பு குணமாகும்.
உடற்சூடு தணியும்.

Leave a Reply