Posted on Leave a comment

சிவனார் வேம்பு சூரணம்

சிவனார் வேம்பு, சங்கம் வேர் பட்டை, பூவரசம் பட்டை இவை வகைக்கு 5 பலம்
எட்டி வேர் பட்டை 50 பலம், வெள்ளருகு சமூலம் 50 பலம்


இவைகளை உலர்த்தி இடித்து சூரணித்து வஸ்திரகாயம் செய்து சமன் நாட்டு சர்கரை சேர்த்து கலந்து வைத்து கொண்டு திரிகடி பிரமாணம் காலை மாலை சாப்பிட்டால் பாம்பு, பூரான், எலி, வண்டு தேள், செய்யான், பூனை, ஓணான் முதலிய கடி விஷம் போகும். மேகப்படை, ஊரல், குஷ்டம் மற்றும் அனைத்து தோல் நோய்களும் கிரந்தி முதலியன குணமாகும்.

புளி, கடுகு, எள்ளெண்ணெய், மீன் கருவாடு மொச்சை, கொள்ளு, பூசணிக்காய், பால், தயிர் துவரை, பாசிபயறு இவை ஆகாது.

Posted on Leave a comment

கூந்தல் தைலம்

தலை முடி நன்கு வளர மூலிகை கூந்தல் தைலம். ஆண் பெண் இருபாலரும் உபயோகிக்கலாம் .

தேவையான பொருட்கள்:

1.தேங்காய் எண்ணெய் -1 லிட்டர்
2.அவுரிச்சாறு – 100 மில்லி
3.கரிசாலைச்சாறு – 100 மில்லி
4.கற்றாழைச்சாறு – 100 மில்லி
5.நெல்லிச்சாறு – 100 மில்லி
6.கொட்டகரந்தைச்சாறு – 100 மில்லி
7.கீழாநெல்லிச்சாறு -100 மில்லி
8.பால் – 100 மில்லி
9.செவ்விளநீர் -2 எண்ணம்
10.வெப்பாலை இலை – 50 கிராம்
11.மருதாணி இலை – 50 கிராம்
12.நன்னாரி வேர் – கைப்பிடி
13.வெட்டிவேர் – கைப்பிடி
14.வெந்தயம் – 10 கிராம்
15.கருஞ்சீரகம் – 10 கிராம்
16.நாகனம் – 10 கிராம்
17.சுருள்பட்டை – 3 கிராம்
18.கிச்சிலி கிழங்கு -50 கிராம்

செய்முறை:
எண் 1 முதல் 9 வரை அனைத்தையும் ஊற்றி நன்கு கலந்துவிடவும்.

பிறகு எண் 10 முதல் 16 வரை அனைத்தையும் இடித்து கல்கமாக அரைத்து எண்ணெய்யுடன் கலந்து அடுப்பை சிறு தீயில் எரியவிட்டு காய்ச்சவும்.

நீர்தன்மை முற்றிலும் அடங்கியபின் எண்ணெய் பதத்தில் வந்தவுடன் எண் 17ல் உள்ள சுருள்பட்டை தூளை தூவி இறக்கிவிடவும்.

இளஞ்சூட்டில் வடிகட்டிய பின்னர் கிச்சிலி கிழங்கு தூளை பருத்தி துணியில் முடிந்து எண்ணெய்யில் இட்டு ஒருமாதம் சூரியப்புடம் வைத்து பயன் படுத்தலாம்.

பலன்:
முடி நன்கு வளரும்.
முடியுதிர்தல் நிற்கும்.
பொடுகு போகும்.
இளநரை குணமாகும்.
பித்த வெடிப்பு குணமாகும்.
உடற்சூடு தணியும்.

Posted on Leave a comment

தாளிசபத்திரி சூரணம்

தாளிசபத்திரி – விராகனிடை 24 (7.320 கிராம்)
மிளகு – விராகனிடை 12 (3.660 கிராம்)
சுக்கு – விராகனிடை 6 (1.830 கிராம்)
திப்பிலி – விராகனிடை 8 (9.015 கிராம்)
கூகைநீறு – விராகனிடை 1 (3.05 கிராம்)
லவங்கப்பட்டை – விராகனிடை 2 (6.010 கிராம்)
ஏலம் – விராகனிடை 2 (6.010 கிராம்)

இவற்றை காயவைத்து சூர்ணம் செய்து வடிகட்டிக் கொண்டு விராகனிடை 24 (7.320 கிராம்) சர்க்கரை சேர்த்துத் தினமும் மூன்று விரல் தேனில் குழைத்து 10 கிராம் பெரியவர்களும் , 5 கிராம் சிறியவர்களும் சாப்பிடவும்

தீரும் வியாதிகள்: கபம் , ஷயம் , காசம் அன்னதுவேஷம் , வாந்தி இவைகள் தீரும் .

பத்தியம்: இச்சா பத்தியம்